பிரான்சின் வால்-டி ஓயிஸில்  இலங்கையர் கொலை : மூவர் கைது 

பிரான்சின் வால்-டி ஓயிஸ் பகுதியில்   56 வயதான இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு  அக் கொலை தொடர்பாக போலீசாரால் இலங்கையர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் இருவர் கொலை செய்யப்பட்டவரது வீட்டில் வைத்தே கைதாகியுள்ளனர்.

கொலை செய்யப்பட்டு இறந்து போன  56 வயதான நபர் Goussainville (Val-d’Oise)  (வால்-டி’ஓயிஸ்) இல் உள்ள அவரது  மாடி வீட்டில்  புதன்கிழமை இறந்து கிடந்தார் என , ஏ.எஃப்.பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்படும்  கொலையாகியுள்ள நபரின் உடலை  கடந்த புதன்கிழமை பிற்பகல் தீயணைப்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

இறந்து போனவரது கொலை தொடர்பாக கைதான இலங்கையைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் போலீசார்  Goussainville காவல் நிலையத்தில்  வைத்து விசாரணை  செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.