கோர விபத்தில் ஓட்டோ சாரதி பலி! – இரு பயணிகள் படுகாயம்.
கொழும்பு – கொலன்னாவை வீதியில் கொத்தட்டுவப் பகுதியை அண்மித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஓட்டோ எதிரே வந்த பஸ்ஸுடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டோ சாரதியின் அலட்சியமான செயற்பாடே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்டப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
