மாத்தறை கடற்கரை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்து

இன்று காலை மாத்தறை கடற்கரை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பஸ் ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே தக்காளி வியாபாரம் செய்ய ஏற்றிவந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இதன் போது லொரியின் சாரதி பலத்த காயத்துடன் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மாத்தறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.