மாட்டுடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் பலி.

முல்லைத்தீவு மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த சிப்பாய் நேற்று(21.11.2020) இரவு மோட்டார் சைக்கிளில் மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணித்த வேளை மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்

Leave A Reply

Your email address will not be published.