மீளப் பெறப்பட்டது யோஷிதவின் மேன்முறையீட்டு மனு!

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை இன்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் அவர் மீளப் பெற்றுக்கொண்டுள்ளார்.

மேன்முறையீட்டு மனுவை மீளப் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் மேன்முறையீடு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால், இதே விடயத்தை மீண்டும் நீதிமன்றில் முன்வைப்பதற்கான உரிமையையும் யோஷித ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.