பட்டியகம பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மதில் சரிந்து விழுந்ததில் வீடொன்று பலத்த சேதம்.

தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கோனாங்கொட கிராம சேவகர் பிரிவின் பட்டியகம பகுதியில்
(24) நண்பகல் 01.00 மணியலவில் பெய்த கடும் மழை காரணமாக குடியிருப்பு ஒன்றின் அன்டிய பகுதியில் உள்ள வீட்டின் மதில் சரிந்து விழுந்ததில் வீடொன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அக்குடியிருப்பில் வசித்த 3 சிறுவர்கள் உள்ளிட்ட வயோதிபர் மேலும் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவரும் தெய்வாதினமாக உயிர் தப்பினர். மேலதிக விசாரணைகளை தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.