கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அணியின் சிறந்த வீரர், தலைவர், பயிற்றுவிப்பாளர் என கால்பந்து உலகில் தனது திறமைகளை டீகோ மரடோனா வெளிப்படுத்தியிருந்தார்.

டீகோ மரடோனாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து இந்த மாத முற்பகுதியில் ஆர்ஜன்டீன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வெளியேறியிருந்தார்.

மரடோனா 1986ஆம் ஆண்டு ஆர்ஜன்டீன அணி உலகக் கால்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் பெரும் பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத்தவிர மரடோனா பல முன்னணி கழகங்களுக்கும் விளையாடியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.