நிதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் நிதி மீளாய்வுக் கூட்டம்.

துணுக்காய் பிரதேச செயலக நிதி முன்னேற்றக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் செயலக செயலக நிதி முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் நிதி மீளாய்வுக் கூட்டம் இன்று(26) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலாளர் ஆ.லதுமீரா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் பிரதேச செயலகத்திற்கு விடுவிக்கப்பட்ட நிதியினை வினைத்திறனுடன் சிறந்த முறையில் முன்கொண்டு செல்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதியினூடாக மேற்கொள்ளப்பட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சு மற்றும் திணைக்களங்களின் நிதியினை எவ்வாறு கையாள்வது மற்றும் அதனை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

மேலும் கிளைகளுக்குரிய உத்தியோகத்தர்கள் வேலைத்திட்டங்கள் தொடர்பான நிதி முன்னேற்றம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

இக் கூட்டத்தில் கணக்காளர்பி.சுஜாத்குமார், உதவிப் பிரதேச செயலாளர் கு. நித்தியா, மற்றும் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.