தோட்டத்திற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் தோட்டத்திற்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் இருந்த தோட்டத்தில் காட்டு விலங்குகளின் பாதுகாப்புக்காக மின்சாரம் பொருந்தியுள்ளார்

இந்நிலையில் இன்று மாலை தோட்டத்தில் குரங்குகள் நின்றமையால் அதை விரட்டிச் சென்ற போது தவறுதாக தோட்ட வேலியில் இருந்த மின்சாரத்தில் அகப்பட்டு மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர் செட்டிகுளம், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஜெராட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.