மாகாண சபைகளுக்கு உட்பட்ட ஊழியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவில் தாமதம் – சுகாதார சேவை ஊழியர்கள் பாதிப்பு

நிதிப்பற்றாக்குறையினால் மாகாண சபைகளுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அண்மையில் உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களால், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிணங்க மேலதிக நேர கொடுப்பனவின் மொத்த தொகையை அறிவிக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் கிடைத்தவுடன் திறைசேரியிடமிருந்து நிதியை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments are closed.