கொரோனாவால் மேலும் இருவர் சாவு! பலியெடுப்பு 118 ஆக உயர்வு!! – இன்றும் 503 பேருக்குத் தொற்று உறுதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றிரவு அறிவித்தார்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றும் 503 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.