யாழ் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பணியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை
பணியாளர்களுக்கு பி.சி.ஆர் சோதனை.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 41 பணியாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் பெறப்பட்டன.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தலைமையில் பொன்னாலை / மூளாய் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் உட்பட பல பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் நேற்று (01) மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைத்து மாதிரிகளை எடுத்தனர்.

இதன்போது மூளாய் கிராம உத்தியோகத்தரும் இங்கு பிரசன்னமாகியிருந்தார். பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைநகரை சேர்ந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார் என்பதால் மேற்படி பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.