வவுனியாவில் கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டம்! 

வவுனியாவில் கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டம்! 

வவுனியா பொலிஸாரினால் விசேட கொரோனா விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம் இன்று காலை 8.45 மணியளவில் வவுனியா பழைய பஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா ஓட்டோ உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியாவில் சேவையில் ஈடுபடும் ஓட்டோக்களுக்கே கொரோனா விழிப்புணர்ப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன
இதற்கான நிகழ்வில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் செனவிரத்ன, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வவுனியா போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க, பொலிஸார், ஓட்டோ சாரதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.