திருமலையில் 75 ஆயிரம் பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் 75 ஆயிரம் பேர் பாதுகாப்பின் நிமித்தம் 237 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் இன்று தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் உருவான தாழமுக்கம் சூறாவளியாக மாற்றமடைந்து இலங்கையை ஊடறுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணமும் அதிக பாதிப்புக்குள்ளாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில் பல பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் கரையோரங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 75 ஆயிரம் பேர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.