இரண்டு இலட்சம் வழக்குகள் விசாரணையின்றி கிடப்பில்!

2 இலட்சம் வழக்குகள் விசாரணையின்றி கிடப்பில்!

இலங்கையில் 2 இலட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது உள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீதி சேவை ஆணைக்குழுவின் தரவுகளுக்கு அமைய இந்தத் தகவலை வெளியிடுகின்றேன். அதற்கமைய 49 ஆயிரத்து 801 வழக்குகள் ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன. 20 ஆயிரத்து 568 வழக்குகள் 5 முதல் 10 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன. 8 ஆயிரத்து 947 வழக்குகள் 10 முதல் 15 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன. 3 ஆயிரத்து 418 வழக்குகள் 15 முதல் 20 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன.

அத்துடன், 4 ஆயிரத்து 620 வழக்குகள் 25 முதல் 25 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன.

வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் வழக்கு விசாரணை ஆகியன இரு வேறு விடயங்களாகும்.

கொரோனாத் தொற்று பரவும் காலப் பகுதியில் வழக்கு விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையின் கீழ் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 70 இற்கும் அதிகமான தீர்ப்புக்கள் இந்தக் காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.