கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாத்தல் தொடர்பில் விழிப்புணர்வு.

கண்டி மனித அபிவிருத்தி தாபனம் சுகாதார அமைச்சின் கொரோனா தொற்று மத்திய நிலையத்துடன் இணைந்து கொரோனா தொற்றில்  இருந்து மக்களைப் பாதுகாத்தல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வினை மலையகம்  தோட்டப் புறங்களிலும்  புற நகரங்களிலும் மற்றும் கிழக்கு மாகாணத்திலும் நடத்தி வருகின்றது.

மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் சுவரொட்டிகள் மற்றும் கையேடுகளை அறிமுகம் செய்து வைப்பதையும் மனித அபிவிருத்தி தாபனத்தின் பெண்கள் அமைப்பின் தலைவி லோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

– இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.