அம்பாறை மாவட்டத்தில்  இன்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

அம்பாறை மாவட்டத்தில்  இன்று  மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

 

இதன்படி  அட்டாளைச்சேனை -13  , அக்கரைப்பற்று -6 , ஆலையடிவேம்பு – 2  , கல்முனை தெற்கு  – 1 , திருக்கோவிலில்  ஒருவருக்குமே இவ்வாறு  தொற்று உறுதிப்பட்டுள்ளது.

இதுவரை அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது .

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை   303 ஆக அதிகரித்துள்ளது .

திருக்கோவில் சுகாதார பிரிவில் இதுவரை 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 5 பேர் அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனவும்  திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி AAV. மர்சூக் தெரிவித்தார் .

இதுவரை அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் -195

  • அக்கரைப்பற்று – 116
  • அட்டாளைச்சேனை -21
  • திருக்கோவில் -6
  • ஆலையடிவேம்பு  – 6
  • பொத்துவில் – 7
  • இறக்காமம் – 11
  • கல்முனை தெற்கு -6
  • சாய்ந்தமருது – 7
  • அம்பாறை – 1
  • காரைதீவு – 1
  • நாவிதன்வெளி – 2
  • நிந்தவூர் -1
  • மகா ஓயா – 1
  • பதியத்தலாவ – 3
  • தெஹியத்தகண்டிய – 3
  • தமன – 3

Leave A Reply

Your email address will not be published.