கிளிநொச்சியில் 882 பேர் பாதிப்பு; 94 வீடுகள் சேதம்.

கிளிநொச்சியில் 882 பேர்
பாதிப்பு; 94 வீடுகள் சேதம்

‘புரேவி’ சூறாவளியால் கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களைச் சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும், 93 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்று அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 68 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பாதிப்புகல் தொடர்பான தகவல்கள் தொடர்ந்தும் திரட்டபபட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.