இலங்கையில் இன்றும் 517 பேருக்கு ‘கொரோனா’ தொற்று

இலங்கையில் இன்றும் 517 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பேலியகொட கொத்தணி தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 23 ஆயிரத்து 5 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 988 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.