இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த இரண்டு கைதிகளின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஒரு கைதி ஜா-எல பகுதியையும் மற்றவர் வத்தளை பகுதியையும் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஒன்பது கைதிகளின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.