கண்டியில் இன்றும் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவு.

கண்டியில் இன்றும் சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று காலை 7.30 அளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கண்டிமாவட்டத்தின் திகன, அம்பாக்கோட்டை, கெங்கல்ல உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் 4ஆவது தடவையாக பதிவாகிய நிலநடுக்கம் இதுவாகும்.

ஏற்கனவே ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்றுவரை கண்டியில் 4 தடவைகள் நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.