வெள்ளத்தில் மூழ்கியுள்ளது யாழ். பல்கலை பெண்கள் விடுதி! 



யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கனமழை காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்தோடு பல்கலைக்கழகத்தின் இராமநாதன் விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அந்த வீதியால் பயணம் செய்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர.

இதனால் விடுதி பூட்டப்பட்டிருக்கும் நிலையில் விடுதியில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அத்தோடு விடுதிக்குள் மின்சார இணைப்பு அறுந்து தொங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனால் குறித்த வீதியால் பயணம் செய்பவர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.