வலுக்குறைந்த தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயல்.

மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புண்டு.

இன்று மாலை அல்லது இரவு அல்லது நாளைக் காலை (07.12.2020) வடக்கு மாகாணத்திற்கு கனமழை கிடைக்க வாய்ப்புண்டு.

மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியமானது.

-நாகமுத்து பிரதீபராஜா-

Leave A Reply

Your email address will not be published.