முல்லையின் மரணம் தொடர்பில் தந்தையார் புகார்.

சித்திராவின் மரணம் தொடர்பில்
தந்தையார் புகார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதாகும் சித்ராவுக்கு சமீபத்தில் ஹேமந்த் ரவி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று அதிகாலை தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ராவின் உயிரிழப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக ஹேமந்த் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் திருவான்மியூரில் உள்ள சித்ராவின் தாயாருக்கும் ஹேமந்துக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டதால் டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் சித்ராவும் ஹேமந்தும் அறை எடுத்து தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நடிகை சித்ராவின் தாடையில் இருக்கும் காயம் தூக்கு மாட்டிக்கொண்ட போது புடவையால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், முகத்தில் நகக்கீரல் எப்படி வந்தது என ஹேமந்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும். இதனிடையே தன் மகள் ஓட்டலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய என்ன காரணம் அதனை கண்டுபிடித்து தர வேண்டும் என நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாவில் சந்தேகம் இல்லை இறப்புக்காண காரணம் கேட்டு புகாரளித்திருப்பதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.