கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் விடுதி மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதி மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியசாலையில் 24 ஆவது விடுதியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பலர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது.

மேலும், கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் 24 ஆவது விடுதியில் பணிப்புரிந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.