மருதனார்மடம் தொற்றாளர்கள் கோப்பாய் சிகிச்சைப் பிரிவில்!

யாழ். மருதனார்மடம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் நேற்றிரவு கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே/185 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே முதலில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று அவரின் குடும்ப உறவுகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கும் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.