தொற்றாளர் எண்ணிக்கையை சொல்ல பி.சி.ஆர். முடிவு வெளிவர வேண்டும் : வைத்தியர் சத்தியமூர்த்தி இப்படிப் பதில்

பி.சி.ஆர். முடிவுகள் வெளியான பின்னரே உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையை உறுதிபடக் கூறமுடியும் என்று யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாளையும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த பலருக்கு ஆய்வுகூட பரிசோதனைகள் செய்யப்படும்.

நாளைய பரிசோதனை முடிவுகளுக்கு மேலதிகமாக  உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் 104 பேருக்கான பரிசோதனை இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெறும்.

இது தவிர 114 பேருக்கான மாதிரிகள் அநுராதபுரம் ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பலருக்குப் பரிசோதனைகள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

இவர்களில் சிலருக்கு தொற்று இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும்போது மாத்திரம் தொற்று எண்ணிக்கை பற்றி உறுதிபடக் கூற முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.