கொழும்பில் 14,107 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி.

கொழும்பில் 14,107 பேருக்கு
கொரோனா வைரஸ் உறுதி.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 107 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 397 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மூன்றாவது அலையால் கம்பஹா மாவட்டத்தில் 7 ஆயிரத்து 451 பேர் பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 804 பேர் பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அங்கு நேற்று மாத்திரம் 136 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.