மருதனார்மடம் கொத்தணி: மேலும் ஐவருக்குக் கொரோனா!

மருதனார்மடம் கொத்தணி: மேலும் ஐவருக்குக் கொரோனா!

யாழ்., மருதனார்மடம் கொத்தணியில் மேலும் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 98 பேருக்கு கொரோனாப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏழாலையைச் சேர்ந்த 3 பேருக்கும், இணுவிலைச் சேர்ந்த 2 பேருக்கும், வவுனியாவைச் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏழாலை மற்றும் இணுவில் தொற்றாளர்கள் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள்.

வவுனியா தொற்றாளர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்களாவர்” – என்றார்.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.