கொரோனா ஆபத்து சூழலில் மாகாண சபை தேர்தல் ஏன்? எல்லே குணவன்ச தேரர் கேள்வி.

கொரோனா ஆபத்து சூழலில்
மாகாண சபை தேர்தல் ஏன்?
எல்லே குணவன்ச தேரர் கேள்வி.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவும் சூழ்நிலையில் இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பெருந்துயரம் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய சிங்கலே அமைப்பின் எல்லே குணவன்ச தேரர், இந்தத் தருணத்தில் தேர்தல்களை நடத்துவது அரச முதலீட்டை வீணடிக்கும் மற்றுமொரு செயலாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசு முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது மக்கள் கேட்கும் தேர்தல் இல்லை எனத் தெரிவித்த அவர், மக்கள் நிராகரித்துள்ள மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது அரசுக்கு விசுவாசமானவர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கான முயற்சியாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் வடக்கு – கிழக்கு மக்கள் கூட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரச ஆர்வம் காட்டுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

Your email address will not be published.