தப்பியோடிய கொரோனா நோயாளி மடக்கிப் பிடிப்பு!
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/12/download-6.jpeg)
தப்பியோடிய கொரோனா நோயாளி மடக்கிப் பிடிப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வெலிசறை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மருதானைப் பகுதியில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டார் என்று மருதானைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
இதையடுத்து குறித்த நபர் மீண்டும் வெலிசறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் மருதானைப் பொலிஸார் மேலும் கூறினர்.