மருதனார்மடம் கொத்தணி’ தொற்றாளர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு.

மருதனார்மடம் கொத்தணி’ தொற்றாளர் எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு.

யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய மேலும் 10 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணி தொற்று எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தையைச் சேர்ந்த 100 பேருக்கு இன்று மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சங்கானையைச் சேர்ந்த 4 பேர், உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய், வடலியடைப்பு பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 8 பேருக்குத் தொற்று உறுதியானது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஏழாலையைச் சேர்ந்த இருவருக்குத் தொற்று உறுதியானது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கடந்த 6 நாட்களில் 68 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்

Leave A Reply

Your email address will not be published.