அப்துல்லா மஹ்ரூப்புக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அப்துல்லா மஹ்ரூப்புக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்புக்கு எதிர்வரும் 30ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சதொச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் அவர் திருகோணமலையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியல் உத்தரவைப் பெற்றிருந்தார்.

இந்தநிலையில் இன்று மீண்டும் நீதிமன்றில் இணையவழி ஊடாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.