ஜனவரியில் இலங்கை வருகிறார் ஐ.நா. அரசியல் பிரிவின் தலைவர். கோட்டா, மஹிந்த, சம்பந்தனுடன் முக்கிய பேச்சு.

ஜனவரியில் இலங்கை வருகிறார் ஐ.நா. அரசியல் பிரிவின் தலைவர்.
கோட்டா, மஹிந்த, சம்பந்தனுடன் முக்கிய பேச்சு  

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) 2021 ஜனவரி ஆரம்பத்தில் கொழும்பு வரவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் முக்கிய சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் 2021 பெப்ரவரியில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேலேயே அதற்கு முன்னதாக ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே, அவரின் பயணம் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.