பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் இவர்தானா?

விஜய் டிவி தற்போது நான்காவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு ஷாக் தரும் வகையில் போட்டியாளர்களை வெளியேற்றுவதில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன.

 

அந்தவகையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சனம் ஷெட்டியை வீட்டை விட்டு வெளியேற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் ரசிகர்கள் விருப்பப்பட்ட போட்டியாளர்களை வெளியேற்றி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தனர்.

 

தற்போது வரை பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஏற்கனவே கமல் பேசுவது புரியாமல் விழிக்கும் ரசிகர்களுக்கு இந்த சீசன் செம போர் ஆக இருப்பதாக சமூகவலைதளங்களில் கமெண்டுகள் பறந்து வருகின்றன. கடந்த சில வாரங்களாகவே ரசிகர்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்த போட்டியாளர் என்றால் அது அர்ச்சனா தான்.

Bigg Boss Tamil 4: Archana Chandhoke to make an entry as a wild card contestant? | PINKVILLA

பேசாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கௌரவமாக இருந்திருக்கலாம். எங்கேயோ போற மாரியாத்தா என் மேல் வந்து ஏறாத்தா என்ற கணக்காக விஜய் டிவியின் கோக்குமாக்கு வேலையில் மாட்டிக்கொண்டு தற்போது திண்டாடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் அன்பு என்ற வார்த்தைக்கு புது அர்த்தத்தையே கொடுத்துவிட்டார் என்றுகூட சொல்லலாம். இந்நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அர்ச்சனா தான் என தகவல்கள் கசிந்துள்ளன. இதனை விஜய் டிவியின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து பரப்பியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.