சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 74 பேருக்குத் தொற்று! மொத்தப் பாதிப்பு 3,372 ஆக அதிகரிப்பு.

சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 74 பேருக்குத் தொற்று!
மொத்தப் பாதிப்பு 3,372 ஆக அதிகரிப்பு

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் ஆண் கைதிகளாவார் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 114 சிறை அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

மொத்தப் பாதிப்பில் இதுவரை 1,172 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.