மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.