மேல் மாகாணத்தில் மூன்றாம் அலையில் 27,032 பேருக்குத் தொற்று உறுதி!

மேல் மாகாணத்தில் மூன்றாம் அலையில் 27,032 பேருக்குத் தொற்று உறுதி!

கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை மேல் மாகாணத்தில் 27 ஆயிரத்து 32 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 594 தொற்றாளர்களில் 426 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 109 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 2ஆயிரத்து  617 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 306 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.