திருகோணமலைக்குள் பிரவேசிக்க வேண்டாம் − மக்களிடம் கோரிக்கை



திருகோணமலை மாவட்டத்துக்குள் பிரவேசிப்பதை இயலுமானளவு தவிர்த்துக்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட கொரோனாத் தடுப்புக் குழு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் 70 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.