கொரோனாத் தொற்று பயத்தால் பெண்ணொருவர் தீ மூட்டி தற்கொலை!

கொரோனாத் தொற்று பயத்தால் பெண்ணொருவர் தீ மூட்டி தற்கொலை!

கொரோனா வைரஸ் தொற்று வந்துவிட்டதோ என்கின்ற அச்சத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் பெண் ஒருவர் தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வத்தளை – ஹுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று ஏற்பட்டதாக வலுத்த சந்தேகத்துடன் இருந்த குறித்த வயோதிபப் பெண், அதனால் தனது பிள்ளைகளுக்கும் தொற்று ஏற்பட்டு விடலாம் என்கின்ற அச்சத்துடன் இருந்தார் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, இவ்வாறு கொரோனா அச்சத்தால் இலங்கையில் இடம்பெற்ற 4ஆவது தற்கொலை இதுவாகும்.

ஏற்கனவே கம்பஹா, களுத்துறை உட்பட மூன்று இடங்களில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.