யாழில், மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் 15 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கட்சியின் பொதுச் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஐசிங்கத்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.