கிளிநொச்சியில் இன்று ஒருவர் வெட்டிக்கொலை

கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் பொலிஸ் பிரிவில் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்துப் பகுதியில் முறிவுகள் காணப்படுகின்றன எனவும், கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுகின்றன எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் முழங்காவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.