248 பேர் இலங்கை திரும்பினர்; 343 பேர் வெளிநாடு சென்றனர்.

248 பேர் இலங்கை திரும்பினர்;
343 பேர் வெளிநாடு சென்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த மேலும் 248 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்துக்குள்  இவர்கள் 9 விமானங்களில் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் கட்டார் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 343 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இவர்களில் 130 பேர் ஜப்பானுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.