2021இல் இலங்கையிலிருந்து ‘கொரோனா’வை ஒழிப்போம்! அரசு அறிவிப்பு.

2021இல் இலங்கையிலிருந்து
‘கொரோனா’வை ஒழிப்போம்!
அரசு அறிவிப்பு.

எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக ஒழிப்போம் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

பாணந்துறை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முழு நாட்டையும் முடக்காமல் பொருளாதார சந்தர்ப்பத்துக்கு மக்களுக்கு அரசு இடமளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதிக்கு பின்னர் விமான நிலையத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.