யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்குக் கொரோனா!

யாழ். மருதனார்மடம் கொத்தணியில் புதிதாக ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது சங்கானைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர் ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவரோடு நேரடித் தொடர்பை கொண்டிருந்ததன் காரணமாக தனிமைப்படுத்திலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த தென் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.