அனிதா சம்பத்தின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளராக மட்டுமின்றி தற்போது பிக்பாஸ் போட்டியாளராகவும் புகழ் பெற்றவர் அனிதா சம்பத். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா சம்பத் 84 நாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்று கிழமை அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு நியூ இயரை சிறப்பாக கொண்டாட நினைத்த அனிதாவிற்கு பேரிடியாக அமைந்தது அவருடைய தந்தையின் மரண செய்தி.

சீரடிக்கு சென்றிருந்த அனிதாவின் தந்தை ஆர்.சி.சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலேயே காலமானார். தற்போது அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை எடுத்து வரப்பட உள்ளது.

அனிதா சம்பத்தின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.