யாழ்.மாநகர மேயர் தெரிவுக்கு ஆனோல்ட் பெயரே பரிந்துரை! ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவித்தார் மாவை.

யாழ்.மாநகர மேயர் தெரிவுக்கு
ஆனோல்ட் பெயரே பரிந்துரை!

ஊடகங்களிடம் பகிரங்கமாக அறிவித்தார் மாவை.

யாழ்ப்பாணம் மாநகர சபையி நாளை நடைபெறவுள்ளல் மேயர் தெரிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இம்மானுவல் ஆனோல்ட் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று பகிரங்கமாக அறிவித்தார்.

இரண்டு தடவைகள் யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் சபையின் மேயராக இருந்த ஆனோல்ட் தனது பதவியை இழந்துள்ளார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மேயர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மாவை சேனாதிராஜா இன்று ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

நாளை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.