டக்ளஸைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்!

டக்ளஸைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்!

முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் கூறுகின்றார்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவாக ஆதரவு வழங்கி கட்சியின் கொள்கைக்குத் துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்குத் துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 10 பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது கட்சியிலிருந்து நீக்குவோம். இந்த நிலைப்பாட்டில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.