எமது பிள்ளைகளை உடன் ஒப்படையுங்கள்; இல்லையேல் எம்மைக் கொன்று விடுங்கள்!

எமது பிள்ளைகளை உடன் ஒப்படையுங்கள்; இல்லையேல் எம்மைக் கொன்று விடுங்கள்!

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

நல்லூர் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்”, “இனவாதத்தைக் கக்காதீர்கள்”, “எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும்”, “தமிழர்களுக்கு ஒரு நீதி; சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?”, “மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள்”, “இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்”, “எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்” எனப் பல்வேறு கோஷங்களை எழுப்பிக் கதறியழுதனர்.

“காணாமல்போன எமது உறவுகளைத் தேடி எத்தனையோ தாய், தந்தையர் மற்றும் சொந்தங்கள் உயிரிழந்திருக்கின்ற நிலையிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு ஒருவர் ஒருவராக சாவதை விட எங்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று விடுங்கள்” எனவும் இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.