கொரோனா வைரஸ் பரவலால் மேலும் பல பகுதிகள் முடக்கம்!

கொரோனா வைரஸ் பரவலால்
மேலும் பல பகுதிகள் முடக்கம்!

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்முனை பிரதேசத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கல்முனை 01, கல்முனை 01 சீ, கல்முனை 01 ஈ, கல்முனை 02, கல்முனை 02 ஏ, கல்முனை 02 பீ, கல்முனை 03, கல்முனை 03 ஏ, கல்முனைகுடி 01, கல்முனைகுடி 02, கல்முனை குடி 03 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாத் தொற்று பரவுவதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.